ஃபதேஹ்புரி மசூதி, 17 ஆம் நூற்றாண்டில் டெல்லி சாந்தினி சவுக் அருகே கட்டப்பட்ட மசூதி. செங்கோட்டைக்கு எதிரே சாந்தினி சௌக் பகுதியின் மேற்கு முனையில் இந்த ஃபதேஹ்புரி மஸ்ஜித் அமைந்துள்ளது. இந்த மசூதியானது பேரரசர் ஷாஜஹானின் மனைவியருள் ஒருவரான ஃபதேஹ்புரி பேகம் என்பவரால் 1650ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது.