செசாரியா கடற்கரையோரம் (Caesarea Maritima) என்பது செசாரியா நகருக்கு அருகில் இசுரேலிய கடற்கரையில் அமைந்துள்ள தேசிய பூங்கா. பண்டைய செசாரியா கடற்கரையோர நகரும் துறைமுகமும் ஏறக்குறைய கி.மு 25–13 இல் முதலாம் ஏரோதினால் அமைக்கப்பட்டது. இந்நகர் உரோம இறுதிப்பகுதி மற்றும் பைசாந்திய காலத்தில் மக்கள் குடியேற்றமாகவிருந்தது. இதன் இடிபாட்டு எச்சங்கள் இசுரேலின் மத்திய தரைக்கடல் பகுதியில் காணப்படுகின்றது. கோடை காலத்தில் இப்பூங்காவிற்கு மக்கள் அதிகம் வருகின்றனர்.
விக்கிமீடியா பொதுவகத்தில் செசாரியா கடற்கரையோரம் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |