காலிக் கோட்டை (Galle Fort) என்பது இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் காலிக் குடாவில் அமைந்துள்ள கோட்டை. இது 1588 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரால் முதலில் கட்டப்பட்டு, பின்னர் ஒல்லாந்தரால் 1649 ஆம் ஆண்டுக்குப் பின்னான காலப்பகுதியில் அரணாக்கப்பட்டது. இது ஓர் வரலாற்று, தொல்லியல், கட்டடவியல் மரபுரிமை நினைவுச்சின்னமாகும்.