பீம்பேட்கா பாறை வாழிடங்கள் (Bhimbetka rock shelters: தேவநாகரி: भीमबेटका पाषाण आश्रय)என்பவை இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தின் ராய்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்லியல் களம் மற்றும் உலகப் பாரம்பரியக் களமுமாகும்.
பீம்பேட்கா பாறை வாழிடங்கள் வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியாவில் மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக அமைந்துள்ளது. வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் நடனம் மற்றும் வேட்டையாடுதல் முதலிய வாழ்க்கை முறையை அறிய இவ்வோவியங்கள் உதவுகின்றன.இந்த வாழிடங்களில் குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ் போன்ற உயர்நிலை குடியேற்றம் ஏற்பட்டதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பீம்பேட்கா பாறை முகாம்களில் ஏறத்தாழ 30,000 ஆண்டுகள் பழைமையான கற்கால(பாலியோலித்திக் காலம்) பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். மகாபாரத இதிகாசத்தில் வரும் வலிமை மிக்க வீரன், பாண்டவர்களில் ஒருவனான பீமன் இங்கு அமர்ந்ததால் இப்பெயர் பெற்றுள்ளது என்பர்.
விக்கிமீடியா பொதுவகத்தில் பீம்பெட்கா பாறை வாழிடங்கள் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |