சாண்ட் பெளரி (Chand Baori) என்ற பெயருடைய 3,500 படிக்கட்டுகள் கொண்ட கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் அபாநேரி கிராமத்தில் அமைந்துள்ளது.
அபாநேரி கிராமம் ஜெய்ப்பூர் நகரிலிருந்து 95 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமம் ஜெய்ப்பூர்- ஆக்ரா செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு 800 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஹர்ஷத் மாதா கோவில் ஒன்று உள்ளது. இக்கிணறு இக்கோவிலைச் சார்ந்தது. இதன் அமைவிடம் ஆகும்.
சாண்ட் பெளரி ராஜஸ்தானின் மிகப்பழமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஆகும். இது சண்ட ராஜாவால் கட்டப்பட்டது. நிகும்பா வம்சத்தினரால் பொதுவருடம் 800-கும் 900-க்கும் இடையில் கட்டப்பட்டது. ஹர்ஷத் மாதா மகிழ்சிக்கும், பூரிப்பிற்கும் உரிய கடவுளாகும். இக்கிணறானது நீர் சேமிக்கும் அமைப்பிற்காக கட்டப்பட்டது. கிணற்றின் அடியில் காணப்படும் நீரானது வெளிப்புற வெப்பத்தைவிட 5-6 பாகைகள் (degrees) குறைவாக இருக்கும். அதிக வெப்பமான காலங்களில் மக்கள் இக்கிணற்றங்கரையில் கூடுவதும் வழக்கம்.
சாண்ட் பெளரியின் புகைப்படங்களுள் சில கீழே,