லிங்கன் பேராலயம் (Lincoln Cathedral; முழுப்பெயர்: லிங்கன் பேராலயம் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாள் பேராலயம்) என்பது இங்கிலாந்தின் லிங்கன் எனுமிடத்தில் அமைந்துள்ள இங்கிலாந்து திருச்சபையின் ஓர் பேராலயம் ஆகும்.
இதன் கட்டடப் பணிகள் 1088 இல் ஆரம்பமாகி சில கட்டங்களாகத் தொடர்ந்தது. இது 238 வருடங்களாக (1311–1549) உலகில் உயரமான கட்டமாகப் பெயர் பெற்றிருந்தது. 1549 இல் இதன் மத்திய தூபி உடைந்தது, ஆனால் மறுபடியும் கட்டப்படவில்லை. இப்பேராலயம் புனித பவுல் பேராலயம், யோக் மினிஸ்டர் ஆகியவற்றுக்கு அடுத்ததாக 484 by 271 அடிகள் (148 by 83 m) கொண்ட பிரித்தானியாவின் மூன்றாவது பெரிய பேராலயமாகத் திகழ்கிறது.
விக்கிமீடியா பொதுவகத்தில் Lincoln Cathedral தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |