நினிவே (Nineveh), பண்டைய அசிரியப் பேரரசுக்குட்பட்ட வடக்கு மெசொப்பொத்தேமியா நகரம் ஆகும். பண்டைய நகரமான நினிவே, தற்போது ஈராக் நாட்டின் வடக்கில் உள்ள நினிவே ஆளுநகரகத்தில், நினிவே சமவெளியில் மோசுல் நகரத்திற்கு வெளியே உள்ளது.
நினிவே நகரம் டைகிரிசு ஆற்றின் கிழக்கு கரையில் உள்ளது. நினேவா நகரம், கிமு 911 முதல் கிமு 609 முடிய புது அசிரியப் பேரரசின் தலைநகராக விளங்கியது.
நினிவே நகரத்திற்கு 60 கிமீ தொலைவிலும், நிம்ருத்திற்கு தெற்கில் 65 கிமீ தொலைவிலும் பண்டைய அசூர் நகரம் உள்ளது.
புது அசிரியப் பேரரசு காலத்தில், உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக நினிவே நகரம் விளங்கியது. புது அசிரியப் பேரரசில் கிமு 627ல் நடைபெற்ற அசிரியர்களுக்கு எதிரான நினிவே நகரத்தில் நடைபெற்ற போரில், பாபிலோனியர்கள், மீடியர்கள், சால்டியர்கள், பாரசீகர்கள் மற்றும் சிதியர்கள் நினிவே நகரத்தை தாக்கி அழித்தனர்.
பண்டைய அசிரியப் பேரரசின் தலைநகரான நினிவே நகரத்தின் சிதிலங்கள், நினிவே ஆளுநகரத்தின் மோசுல் நகரத்தின் அருகே உள்ள ஆற்றின் கரையில் இன்றும் காணப்படுகிறது. நினிவேவின் டெல் தொல்லியல் களம்மற்றும் வடக்கு அரண்மனை தொல்லியல் களங்களிலிருந்து அசிரியப் பேரரசின் சிற்பங்கள் கிடைத்துள்ளது.நினிவே தொல்லியல் களங்களிலிருந்து கண்டெடுத்த தொல்பொருட்கள் உலகின் பல்வேறு அருங்காட்சியகங்களில் பார்வைக்கு உள்ளது.
இசுலாமிய அரசுப் படைகள், 2010ம் ஆண்டின் நடுவில், பண்டைய நினிவே நகரத்தின் எஞ்சியிருந்த தொல்லியல் நினவுச் சின்னக் கட்டிடங்களை குண்டுகள் வைத்து தகர்த்தெரிந்தனர். சனவரி 2017ல் ஈராக்கிய படைகள் நினிவே நகரத்தை இசுலாமிய அரசின் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டனர்.
விவிலியத்தின் யோனா புத்தகத்தில் நினிவே நகரத்தின் தீர்க்கதரிசி யோனா குறித்தும், நினிவே மக்கள் குறித்தும் பேசியுள்ளது.
யூதர்களின் எபிரேய வேதாகத்தில் பண்டைய அசிரியா நாட்டின் அசூர், ஊர், நிம்ருத் நகரங்களுடன் நினிவே நகரமும் குறிப்பிட்டுள்ளது.
யூத சமயத்தினர் வாழ்ந்த பண்டைய அசிரியாவின் தலைநகரமாக நினிவே நகரம் திகழ்ந்தது.யூத தீர்க்கதரிசி ஜெக்காரியா வாழ்ந்த காலத்தில் அசிரியப் பேரரசராக ஹெசிக்கியா இருந்தார்.
மத்தியதரைக் கடலுக்கும், இந்தியப் பெருங்கடலுக்கு இடையே, வடக்கேமெசொப்பொத்தேமியாவில், டைகிரீஸ் ஆற்றின் கரையில் அமைந்த புது அசிரியப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய நினிவே நகரம். மேற்காசியா மற்றும் பண்டைய அண்மை கிழக்கையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் முதன்மையான வணிகப் பாதையாக நினிவே இருந்தது.
பண்டைய தொல்பொருட்கள் கொண்ட உலகின் பழைமையான, பெரிய நகரமான நினிவே, கிமு 6,000 ஆண்டின் புதிய கற்காலத்தின் பிந்தைய காலத்தைச் சேர்ந்தது.
கிமு 3,000ல் நினிவே நகரத்தில், மெசொப்பொத்தேமியா பெண் கடவுளான இஸ்தரை வழிபட்டனர். நிலநடுக்க்த்தால் அழிந்து போன நினிவே நகரத்தை, கிமு 2,260ல் அக்காடியப் பேரரசு காலத்தில் மீண்டும் சீரமைத்து நிறுவப்பட்டது.
கிமு 1800ல் பழைய அசிரியப் பேரரசு ஆட்சியில், நினிவே நகரம் இஸ்தர் எனும் பெண் கடவுளை வழிபடும் மையமாக விளங்கியது.
அசிரிய நகரமான நினிவே நகர இராச்சியம், கிமு 1,400 முதல் 50 ஆண்டுகள் வரை மித்தானி இராச்சியத்தின் கீழ் சிற்றரசாக இருந்தது. கிமு 1,365ல் அசிரியப் பேரரசர் அசூர்-உபாலித், நினிவே நகரத்தை கைப்பற்றி மத்திய அசிரியப் பேரரசை (கிமு 1365 – 1050) நிறுவினார்.
பண்டைய அண்மை கிழக்கின் முக்கியமான அசூர் நகரம், பழைய அசிரியப் பேரரசு (கிமு 2025–1750), மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1365–1050), மற்றும் புது அசிரியப் பேரரசுகளின் (கிமு 911–608) தலைநகரமாக விளங்கியது.
புது அசிரியப் பேரரசர் இரண்டாம் அசூர்னசிர்பால் ஆட்சியில் (கிமு 883–859), நினிவே நகரத்தில் புதிய வழிபாட்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டது.
கிமு 700ல் பெரிய அரண்மனைகளுடன் கூடியிருந்த நினிவே நகரத்தின் அரண்மனை 530 x 242 மீட்டர் நீள அகலத்துடன், சிற்பங்களுடன் கூடிய 80 அறைகளுடன் இருந்தது. மேலும் இவ்வரண்மனையில் ஆப்பெழுத்துகள் கொண்ட பலகைகள் கொண்டிருந்தது. அரண்மனையின் 22 மீட்டர் ஆழமுள்ள அடிக்கல் செங்கல், சுண்ணாம்பு மற்றும் களிமண்னால் கட்டப்பட்டது.
கிமு 612ல் நடைபெற்ற நினிவே போரின் போது, பாபிலோனியர்கள், சால்டியர்கள், பாரசீகர்கள், மீடியர்களின் தொடர் தாக்குதல்களால், புது அசிரியப் பேரரசின் தலைநகரான நினிவே நகரத்தின் செழிப்பு குறையத் துவங்கியது.
கிமு 612 முதல் மனிதர்கள் வாழ இயலாத பகுதியாக இருந்த நினிவே நகரம், பின்னர் பாரசீகர்களின் அகாமனிசியப் பேரரசின் (கிமு 550 – 330) கீழ் வந்ததது. பின்னர் நினிவே நகரம் கிமு 320ல் பேரரசர் அலெக்சாந்தர் ஆட்சியின் கீழ் சென்றது. பின்னர் சசானியப் பேரரசு (கிபி 224 – 651) ஆட்சியிலும்; கிபி 637 முதல் இசுலாமிய கலீபாக்களின் ஆட்சியின் கீழ் நினிவே நகரம் இருந்தது.
1842ல் பிரான்சு நாட்டின் பவுல் எமிலி பொட்டா என்பவர், தற்கால ஈராக் நாட்டின் மோசுல்]] நகரத்தின் அருகே டைகிரீஸ் ஆற்றின் கரையில் அகழாய்வு மேற்கொண்டதில், நினிவே நகரத்தின் முற்றிலும் சிதிலமடைந்த அரண்மனை போன்ற கட்டிடங்களையும், மண் மேடுகளையும் கண்டறிந்தார்.
1847ல் பிரித்தானிய அரசியல் வல்லுனர் ஆஸ்டின் ஹென்றி லேயர்டு என்பவர் நினிவே நகரத்தின் சிதிலமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார். 1853ல் ஆஸ்டின் ஹென்றி லேயர்டு, நினிவே நகரக் கோட்டைச் சுவர்களில் 22,000