கிரோனாவின் புனித மேரி பெருங்கோவில் என்பது கிரோனா ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது எசுப்பானியாவில் உள்ள காத்தலோனியாவின் கிரோனாவில் அமைந்துள்ளது. இதன் உட்பகுதியில் காணப்படும் கோயிலின் நடுக்கூடம் கோதிக் கட்டடக்கலை வடிவமைப்பில் அமைந்த அகலமான நடுக்கூடம் ஆகும். இதன் அகலம் 22 மீற்றர்கள் (72 ft), மற்றும் இது ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கையில் புனித பேதுரு பேராலயத்திற்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பெரிய அகலமான நடுக்கூடத்தைக் கொண்ட பெருங்கோவில் ஆகும். பதினோராம் நூற்றாண்டில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது ரோமனெஸ்க் பாணியிலேயே அமைக்கப்பட்டது, பின் 13 மூன்றாம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து கோதிக் பாணியில் அமைக்கப்பட்டது. பெருங்கோவில் நாற்பத்தைந்து மீட்டர்கள் உயரம் கொண்டது.