திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில், சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இது ஒரு பாடல்பெற்ற சிவாலயம் ஆகும். இங்கு மூலவர் மருந்தீஸ்வரர் மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார், தாயார் திரிபுரசுந்தரி அம்மன் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. விநாயகர், முருகன் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. கோயிலின் கிழக்கு கோபுர வாசல் முன்னே தெப்பகுளமும், உள்ளே ஒரு சிறிய தடாகமும், நந்தவனம் கோயிலுக்கு உள்ளேயேயும் அமைந்துள்ளது.
|
|
விக்கிமீடியா பொதுவகத்தில் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |