காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்த நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்குள்ள விசுவநாதர் ஆலயத்திலுள்ள லிங்கம், சைவ சமயத்தினரிள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். பண்டைய காலங்களில் கல்விக்கூடங்கள் பல அமைந்து கல்வியிற் சிறந்த இடமாக விளங்கியது வாரணாசி. இங்கு தயாரிக்கப்படும் பெனாரஸ் பட்டுப் புடவைகள் மிகப் பிரபலமானவை.