ஜோகேஸ்வரி குகைகள் (Jogeshwari Caves) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், மும்பை புறநகரத்தின் கிழக்கில் ஜோகேஸ்வரி எனுமிடத்தில் அமைந்த பௌத்தக் குடைவரைகள் ஆகும். இக்குடைவரை மூன்று நுழைவு வாயில் கொண்டது கிபி 520 - 550 ஆண்டுகளில் வடிக்கப்பட்ட மகாயான பௌத்தப் பிரிவைச் சார்ந்த இக்குடைவரைகளில் தற்போது இந்து சமயக் கடவுள்களின் இருப்பிடமாக திகழ்கிறது. இக்குகையின் உட்புறத்தில் ஜோகேஸ்வரி மாதாவின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்குகைகளைச் சுற்றிலும் தற்போது மக்கள்தொகை பெருகிவிட்டதால், இக்குகைகளை கழிவிடங்களாகவும், சமூகவிரோத செயல்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.
விக்கிமீடியா பொதுவகத்தில் ஜோகேஸ்வரி குகைகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |