வெறுங்கல்லறை (cenotaph) செனொடாப் அல்லது நினைவுச் சின்னம் சவத்தை அடக்கஞ் செய்யாது ஒருவர் அல்லது ஒரு குழுவினரின் ஞாபகக்குறியாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும். இங்கு துவக்கத்தில் சவம் அடக்கம் செய்யப்பட்டு பின்னர் வேறிடத்திற்கு மாற்றப்பட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் செனொடாப் என்ற சொல் கிரேக்க மொழி: κενοτάφιον = கெனொடாபியோன் என்பதிலிருந்து வந்தது; கெனோசு, என்றால் "வெறுமை", டாபோசு என்றால் "கல்லறை". பெரும்பாலான வெறுங்கல்லறைகள் தனிநபரைக் கௌரவிக்கும் முகமாக கட்டப்பட்டுள்ள போதும் பல வெறுங்கல்லறைகள் போரில் மடிந்த வீரர்கள் போன்று ஓர் குழுவினருக்காகவும் எழுப்பப்பட்டுள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில் வெறுங்கல்லறை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |