பெலே மலை (Mount Pelée, பிரெஞ்சு: Montagne Pelée) என்பது கரிபியன் தீவுகளில் ஒன்றான மார்டீனிக் தீவில் உள்ள ஒரு குமுறும் எரிமலையாகும்.
பெலேஎரிமலை 1902ஆம் ஆண்டு மே 8 இல் வெடித்தபோது மிகப் பெரும் அழிவுகள் ஏற்பட்டன. இது 20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் எரிமலைக் குமுறலாகக் கருதப்படுகிறது. மொத்தம் 26,000 முதல் 36,000 பேர் வரையில் இறந்தனர். தீவின் ஆளுநரும் இதில் கொல்லப்பட்டார். மார்டீனிக் தீவின் மிகப்பெரும் நகரான சென்-பியேர் முற்றாக அழிந்தது.