தாமரைக் கோயில் (Lotus temple) என்பது இந்தியாவில் தில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டுத்தலம் ஆகும். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக தாமரைக் கோயில் என அறியப்படுகிறது. பஹாய் வழிபாட்டுத்தலம் டெல்லியின் வசீகரமான இடமாக உள்ளது. 1986 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இது இந்தியத் துணைக்கண்டத்தின் தாய்க் கோயிலாகக் கருதப்படுகிறது. இது எண்ணற்ற கட்டடக்கலை விருதுகளை வென்றுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான செய்தித்தாள் மற்றும் நாளிதழ் கட்டுரைகளில் தனித்தன்மையுடன் வெளிவந்துள்ளது.
வழிபாடு
மற்ற பிற பஹாய் வழிபாட்டுத்தளங்களைப் போன்றே தாமரைக் கோயிலானது
மதத்தைப் பொருட்படுத்தாத அல்லது பஹாய் புனித நூல்களில்
வலியுறுத்தப்பட்டிருக்கும் மற்ற தனித்துவங்கள் கொண்ட அனைவருக்குமான
கோயிலாக இருக்கிறது. அனைத்து மத மக்களும் ஒன்று கூடி கடவுளை எந்த
இனப்பாகுபாடுகளும் இன்றி வழிபடுவதிலே வழிபாட்டுத்தளத்தின் ஆன்மா
உள்ளது என பஹாய் விதிகளில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் பஹாய்
நம்பிக்கை கொண்ட புனித நூல்களை மட்டுமே பஹாய் விதிகள்
வலியுறுத்துகின்றன. மேலும் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலின்
உட்பகுதியில் எந்த மொழியிலும் படிக்கலாம் அல்லது மந்திரம் ஓதலாம்;
அதேசமயம் படித்தல்கள் மற்றும் பிரார்த்தனைகளை குழுக்களாக இணைந்து
பாடலாம். ஆனால் கோவிலில் உட்புறத்தில் எந்த இசைக்கருவிகளும்
இசைக்கப்படக் கூடாது. இங்கு எந்த சமயபோதனைகளும் வழங்கப்படுவதில்லை.
சடங்கு ரீதியான நடைமுறைகள் எதுவும் செயல்படுத்தப்படுவதில்லை.
கட்டமைப்பு
தாமரைக் கோயில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தளங்களும்
கட்டடக்கலைச் சிறப்பில் பங்கு கொள்பவையாக உள்ளன. அவற்றில் சில பஹாய்
புனித நூல்களில் குறிப்பிட்டுள்ளது போல் உள்ளன. இந்த மதத்தை
உருவாக்கியவரின் மகனான `அப்து'ல்-பஹா, வழிபாட்டுத்தளத்திற்குத்
தேவையான கட்டடக்கலைப் பண்புகளை நிர்ணயித்தார். அந்த அமைப்பு
ஒன்பது-பகுதிகளைக் கொண்ட வட்டமான வடிவத்தைக் கொண்டதாக இருந்தது. தாமரை
மலரினால் ஈர்க்கப்பட்ட இதன் வடிவம், ஒன்பது பக்கங்களை அமைப்பதற்கு
மூன்று கொத்துக்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட 27 சார்பற்று-நிற்கும்
பளிங்கு தரித்த "இதழ்கள்" கொண்ட தொகுப்பாக இருக்கிறது. தற்போதுள்ள
அனைத்து பஹாய் வழிபாட்டுத்தளங்களும் குவிமாடத்தைக் கொண்டிருந்த போதும்
அவை அதன் கட்டுமான அமைப்பிற்குத் தேவையான பகுதியாக
பொருட்படுத்தப்படுவதில்லை. வழிபாட்டுத்தளத்தினுள் உருவப்படங்கள்,
சிலைகள் அல்லது உருவங்கள் ஆகியவை இடம்பெறக்கூடாது எனவும் பஹாய்
புனிதநூல் குறிப்பிடுகிறது. மேலும் போதனை மேடைகள் அல்லது பூஜை
மாடங்கள் போன்றவை கட்டடக்கலைக் கூறுகளில் இருக்கக் கூடாது எனவும் அந்த
நூல் கூறுகிறது (படிப்பவர்கள் எளிமையான சிறிய விரிவுரை நிறுத்தத்தின்
பின்னால் நிற்கலாம்). தாமரைக் கோயிலின் மைய மண்டபத்திற்குச்
செல்வதற்கு ஒன்பது கதவுகள் இருக்கின்றன. அந்த மண்டபம் 2,500 பேர் வரை
இருக்கக்கூடிய தகுதி வாய்ந்ததாகும். இதன் மைய மண்டபம் 40
மீட்டர்களுக்கும் சற்று அதிகமான உயரத்தில் இருக்கிறது, மேலும் அதன்
புறப்பரப்பு வெள்ளைப் பளிங்கினால் உருவாக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத்தளமும் அதனைச் சூழ்ந்துள்ள ஒன்பது தூண்களும், தோட்டங்களும்
26 ஏக்கர் (105,000 m²; 10.5 ha) நிலப்பரப்பில் அமைந்துள்ளன.
நாட்டின் தலைநகரமான டெல்லியில் உள்ள பாஹாபூர் என்ற கிராமத்தில்
இந்த இடம் உள்ளது. இதனைக் கட்டிய கட்டடக்கலை நிபுணர் ஃபாரிபோர்ஸ் சாபா
ஒரு ஈரானியர் ஆவார். அவர் தற்போது
கனடாவில் வசிக்கிறார். 1976 ஆம் ஆண்டில் அவர் இதனை
வடிவமைப்பதற்காக அணுகினார். பின்னர் அதன் கட்டுமானத்தை கவனித்துக்
கொண்டார். மேலும் பசுமைக்குடில் உருவாக்குவதற்கு அந்த இடத்திற்கு ஏற்ற
உள்நாட்டுத் தாவரங்கள் மற்றும் மலர்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததன்
மூலம் கட்டுமான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து பணத்தை சேமித்தார்.
இந்த நிலத்தை வாங்குவதற்கு ஹைதராபாத்தின் ஆர்டிஷிர் ருஸ்டாம்பூர்
(Ardishír Rustampúr) பெரும்பகுதி நிதியைக் கொடையாக அளித்தார். அவர்
1953 ஆம் ஆண்டில் தனது முழு வாழ்க்கைச் சேமிப்பையும் இதன்
கட்டுமானத்திற்காக வழங்கினார்.
சுற்றுலா
1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக
டெல்லியில் உள்ள பாஹாய் வழிப்பாட்டுத்தளம் திறந்து வைக்கப்பட்டது.
இதுமுதல், 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை இங்கு 50 மில்லியனுக்கும்
அதிகமானோர் வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக உலகில் மிகவும் அதிகமாக
வருகை தரப்பட்ட கட்டடங்களில் இதுவும் ஒன்றானது. அந்த ஆண்டுகளில்
அதனைப் பார்வையிட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை, ஈபிள் கோபுரம்
மற்றும்
தாஜ் மகால் ஆகியவற்றின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை முந்தியது.
இந்து புனித நாட்களின் போது இங்கு 150,000 பேருக்கும் அதிகமானோர்
வருகை தருகின்றனர்; ஒவ்வொரு ஆண்டும் நான்கு மில்லியன் பார்வையாளர்கள்
இங்கு வருகை தருகின்றனர் (ஒவ்வொரு நாளும் சுமார் 13,000 மக்கள் அல்லது
ஒவ்வொரு நிமிடமும் 9 பேர் இங்கு வருகை தருகின்றனர்).
இந்த வழிபாட்டுத்தளம் "தாமரைக் கோவில்" எனப் பொதுவாகக்
குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகையான
துர்கா பூஜையின் போது தாமரைக் கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டு அதன்
பல்வேறு உருவப்படிமங்கள் அமைக்கப்படுகின்றன. பெண் கடவுள் துர்கா
தேவியை வணங்குவதற்காக தற்காலிக அமைப்புகள் இங்கு அமைக்கப்படுகின்றன.
சிக்கிமில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிரந்தரமான இந்து
காலடி வழிபாட்டு கோவிலின் உருப்படிமம் இருக்கிறது.
தனிச்சிறப்புகள்
தொழில் ரீதியான கட்டுமானவியல், நுண்கலை, மதம், அரசு சார்ந்த
மற்றும் பிற தரப்புகளிலும் இக்கோயில் பரவலான ஈர்ப்பினைப்
பெற்றுள்ளது.
விருதுகள்
- 1987 ஆம் ஆண்டு, பாஹா வழிபாட்டுத்தளத்தின் கட்டடக் கலைஞரான
ஈரானில் பிறந்த ஃபாரிபோர்ஸ் சாபாவுக்கு, "மலரின் அழகுக்கு ஈடாகப்
போட்டியிடும் மற்றும் அதன் காட்சித் தாக்கத்தில் கடுமையான தாக்கத்தை
ஏற்படுத்தும்" கட்டடத்தை உருவாக்கியதற்காக ஐக்கிய இராட்சியம்-சார்ந்த
கட்டமைப்புப் பொறியாளர்கள் நிறுவனத்திடம் சமயக் கலை மற்றும்
கட்டடக்கலையில் மிகவும் சிறப்பான செயல்பாட்டுக்கான விருதினைப்
பெற்றார்.
- 1987 ஆம் ஆண்டு , வாஷிங்டன், D.C. இல் கட்டிடக் கலைஞர்களின்
அமெரிக்க நிறுவனத்தைச் சேர்ந்த சமயம், கலை மற்றும் கட்டடக்கலை
ஆகியவற்றுக்கான மதநல்லிணக்க மன்றமானது புதுதில்லிக்கு அருகில் உள்ள
பாஹாய் வழிபாட்டுத்தளத்தின் வடிவமைப்புக்காக திரு. எஃப். சாபாவுக்கு
1987 ஆம் ஆண்டில் "சமயக் கலை மற்றும் கட்டடக்கலையில் சிறப்பான
செயல்பாட்டுக்கான" அதன் முதல் கெளரவ விருதை வழங்கியது.
- 1988 ஆம் ஆண்டு, வட அமெரிக்காவின் ஒளிமயமான பொறியியல் சமூகம்
வெளிப்புற ஒளியமைப்புக்கான சிறப்புச் சான்றாய் அமைதல் பிரிவில் பால்
வாட்டர்பரி வெளிப்புற ஒளியமைப்பு வடிவமைப்பு விருதை வழங்கியது
- 1989 ஆம் ஆண்டு, மஹாராஸ்டிரா-இந்தியா சேப்டர் ஆஃப் த அமெரிக்கன்
கான்கிரிட் இன்ஸ்டியூட்டில் (Maharashtra-India Chapter of the
American Concrete Institute) இருந்து "சிறப்பான கான்கிரீட்
கட்டமைப்பிற்கான" விருதினைப் பெற்றது.
- 1994 ஆம் ஆண்டு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் பதிப்பில்
அதன் 'கட்டடக்கலை' பிரிவில் அக்காலத்தின் ஈடுயிணையற்ற சாதனையாக
அக்கோவிலுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
- 2000 ஆம் ஆண்டு, சீனாவின் கட்டடக்கலை அமைப்பு சமீபத்தில்
வெளியிட்ட "வேர்ல்ட் ஆர்கிடெக்ச்சர் 1900-2000: எ கிரிட்டிகல் மொசைக்,
வால்யூம் எய்ட், சவுத் ஆசியா"வில் (World Architecture 1900-2000: A
Critical Mosaic, Volume Eight, South Asia) 20வது நூற்றாண்டில் 100
ஒழுங்குமுறைப் பணிகளில் ஒன்றாக இதனைக் குறிப்பிட்டிருந்தது.
- 2000 ஆம் ஆண்டு, தாமரைக் கோவிலின் கட்டடக்கலை நிபுணர்,
ஃபாரிபோர்ஸ் சாபாவுக்கு வியன்னாவில் குளோப்ஆர்ட் அகாடெமி அதன்
"குளோப்ஆர்ட் அகாடெமி 2000" விருதை வழங்கியது. "20வது நூற்றாண்டு
தாஜ்மகாலாக இதன் சேவையின் பரிமாணம், அனைத்து நாட்டு மக்கள், சமயங்கள்
மற்றும் சமுதாயப் படிநிலைகள் ஆகியவற்றில் உலகளவில் மற்ற கட்டடக்கலை
நினைவுச்சின்னங்களால் முடியாதளவிற்கு விரிவாக ஒற்றுமை மற்றும்
இணக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக" இந்த விருதினை வழங்குவதாக அது
குறிப்பிட்டது.
வெளியீடுகள்
கட்டுரைகள்
2003 ஆம் ஆண்டு முதல் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில்
ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இக்கோயில் இடம்பெறுகிறது.
கட்டடக் கலைஞர்கள் மற்றும் மற்றவர்களால் கட்டமைப்பைப் பற்றி புகழ்ந்து
எழுதப்பட்ட கட்டுரைகள், நேர்காணல்கள் போன்ற வடிவங்களில் கோயிலைப்
பற்றியத் தகவல்கள் அடங்கிய 500க்கும் மேற்பட்ட வெளியீடுகளை பாஹாய் உலக
நிலைய நூலகம் (The Baha'i World Centre Library) தொகுத்து
வைத்துள்ளது.
- 2000 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் பிரான்சின் "ஆக்சுவலிட் டெஸ்
ரெலிஜியன்ஸ்" பத்திரிகையில் "Les religions et leurs chef-d'œuvres"
(சமயங்கள் மற்றும் அதன் தலைசிறந்த படைப்புகள்) என்று அழைக்கப்பட்ட
சிறப்புப் பதிப்பில் தாமரைக் கோயிலைப் பற்றிய நான்கு-பக்கக் கட்டுரை
வெளியானது.
- 2001 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பெற்றது
- 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத ஆர்கிடெக்ச்சர் (பத்திரிகை)
- லைட்டிங் டிசைன்+அப்ளிகேசன் பகுதி 19, எண். 6, வட அமெரிக்காவின்
ஒளிமயமான பொறியியல் அமைப்பின் "இருபதாம் நூற்றாண்டின் தாஜ்மகால்"
கட்டுரை
- 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாத வால்பேப்பர்*
- 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் டிசம்பர் மாத பொரொகிரசிவ்
ஆர்கிடெக்ச்சர்
- கென்னத் ஃபிராம்ப்டன் எழுதி ஸ்பிரிங்கர்-வெர்லோக் வைன் வெளியிட்ட
வேர்ல்ட் ஆர்கிடெக்ச்சர்: எ கிரிட்டிகல் மொசைக் 1900-2000, பகுதி 8
(World Architecture: A Critical Mosaic 1900-2000, Vol 8).
நியூயார்க் - "சிறந்த எழிலின் ஆற்றல்மிகு உருவம் ... நகரின் ஒரு
முக்கிய அடையாளச்சின்னம்".
-
ஃபெயித் & ஃபார்ம் - கட்டிடக் கலைஞர்களின் அமெரிக்க
நிறுவனத்தைச் சேர்ந்த IFRAA இன் இதழ், பகுதி XXI "கட்டுமானம் மற்றும்
ஏற்புடைய வெளிப்படுத்தும் தன்மை ஆகியவற்றின் அபாரமான அருஞ்செயல்"
- ஸ்ட்ரக்ச்சுரல் எஞ்ஜினியர், UK (வருடாந்திர) டிசம்பர் 1987
- 1989 ஆம் ஆண்டு என்சைக்ளோபீடியா ஈரானிகா
புத்தகங்கள்
- 1992 ஆம் ஆண்டு, ஃபாரெவர் இன் ப்ளூம்: த லோட்டஸ் ஆஃப் பாஹாபூர்
(Forever in Bloom: The Lotus of Bahapur) - புகைப்படங்கள் ரகு ராய்,
எழுத்து ரோகர் ஒயிட், டைம் புக்ஸ் இன்டர்நேசனல்
- 2002 ஆம் ஆண்டு, த டானிங் பிளேஸ் ஆஃப் த ரிமம்பரன்ஸ் ஆஃப் காட்
(The Dawning Place of the Remembrance of God), தாமஸ் பதிப்பகம்,
2002
அஞ்சல்தலைகள்
- 6.50 ரூபாய் தபால் அஞ்சல்தலைகளானது இந்தியாவில் புதுதில்லியில்
உள்ள பாஹாய் வழிபாட்டுத்தளத்தைக் கொண்டுள்ளன
இசை
- கோவில் அர்ப்பணிப்புச் சேவை (1986).
- 1987 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள ஓண்டாரியோவில் டோன்'ட் பிளிங்க்
மியூசிக், இன்க்குக்காக ஜிவெல் இன் லோட்டஸ் என்ற ஆல்பத்தை கீபோர்டு
கலைஞர் ஜேக் லென்ஸ் தயாரித்தார். இதில் சீல்ஸ் & க்ரோஃப்ட்ஸ், லேலி
எரிக்ஸ் மற்றும் பலரது பாடல்கள் இடம்பெற்றன.
பெருமளவு பார்வையாளர்கள்
- "CNN அறிக்கையின் படி உலகில் பெருமளவு பார்வையிடப்பட்ட
கட்டடங்கள்"
- "இந்தியாவில் பெருமளவு பார்வையிடப்பட்ட கட்டடம், ஆண்டுக்கு சுமார்
4.5 மில்லியன் பார்வையாளர்களுடன் தாஜ் மகாலையும் முந்தியது".
குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள்
-
- (குறிப்பிடத்தக்க பார்வையாளர்களின் சிறுபட்டியலுடன் கூடிய 1998
ஆம் ஆண்டு கட்டுரை)
- (2003 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க பார்வையாளர்களின் பட்டியல்)
- (2004 ஆம் ஆண்டு சேர்க்கை)
- பண்டிட் ரவி ஷங்கர் சித்தார் மேஸ்ட்ரோ
- டான்சானியா, ஹங்கேரி மற்றும் பனாமா ஆகியவற்றின் தூதர்கள்
- பெருமுடா, ஹங்கேரி, இந்தியா, ஐவரி கோஸ்ட், நேபாளம், USSR/ரஸ்யா,
ரோமானியா, சிங்கப்பூர், தாஜிக்ஸ்தான், ஏமன், யுகோஸ்லவியா, ஜாம்பியா
ஆகியவற்றில் இருந்து அரசு அதிகாரிகள் (அமைச்சர்கள், பிரதமர்கள்)
- இந்திய உச்ச நீதிமன்றத்தின் உறுப்பினர்கள்
- காலம் சென்ற இந்தியப்பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா
காந்தி
- நேபாள இளவரசர் நிரஞ்சன் ஷா
- டாக்டர் உடோன் முச்டர் ராஃபேய், மண்டல இயக்குநர், உலக சுகாதார
அமைப்பு
- ஐஸ்லேண்டின் அதிபர் ஓலாஃபூர் ராக்னர் கிரிம்சன் அதிகாரப்பூர்வமாக
பார்வையிட்ட முதல் தலைவர் ஆவார்
- அம்ஜத் அலி கான் பாரம்பரிய இந்திய இசையமைப்பாளர்
- ரோமானிய இளவரசி மார்கரிட்டா மற்றும் அவரது கணவர் இளவரசர் ராடு
வோன் ஹோனன்சோல்லரன்-வெரிங்கன்
- ஸ்லோவோக் குடியரசின் முதல் பெண்மணி, சில்வியா காஸ்பரோவிகோவா
புற இணைப்புகள்