புனித சாவா தேவாலயம் (ஆங்கிலம்:Church of Saint Sava) என்பது சேர்பியாவின் பெல்கிரேட்டில் அமையப்பட்டுள்ள ஓர் சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபைத் தேவாலயம் ஆகும். இது உலகிலுள்ள கிழக்கு மரபுவழி திருச்சபைத் தேவாலயங்களில் பெரியதும், உலகிலுள்ள பத்து பெரிய கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றும் ஆகும். இது சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபை நிறுவுனரும் மத்திய கால சேர்பியாவின் முக்கிய நபர்களில் ஒருவருமான புனித சாவா என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது விராகா பீடபூமியில் கட்டப்பட்டுள்ளது. இங்குதான் புனித சாவாவின் எச்சங்கள் சினான் பாசா எனும் ஓட்டமானிய மாமந்திரியால் 1595 இல் எரிக்கப்பட்டன.
விக்கிமீடியா பொதுவகத்தில் Temple of Saint Sava தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |