மீட்பர் லூதரனிய தேவாலயம் எருசலேம் பழைய நகரிலுள்ள இரண்டாவது புரட்டஸ்தாந்து தேவாலயமாகும். இது இசுரேலிலுள்ள மூன்று செருமனிய நற்செய்தி சபைகளில் ஒன்றாகிய எருசலேம் நற்செய்தி அமைப்புக்குச் சொந்தமாகும். பேராயர் போல் பேர்டினான்ட் குரோத் (1859-1955) என்பவரால் 1893 க்கும் 1898 க்கும் இடையில் கட்டப்பட்டது. இத்தேவாலயம் அரபு, செருமனி, டேனிய மற்றும் ஆங்கிலம் பேசும் லூதரனியர்களுக்கு வீடாகவுள்ளது.