சிவப்புக் காடு (Red Forest, ரஷ்ய மொழி: Рыжий лес), எனப்படுவது உக்ரைன் நாட்டில் செர்னோபில் அணு உலையைச் சுற்றியுள்ள 10 ச.கி.மீ பரப்பளவில் உள்ள காட்டு மரப்பகுதியைக் குறிக்கும். ஏப்ரல் 26, 1986-ஆம் ஆண்டு செர்னோபில் உலையில் ஏற்பட்ட அணுக்கசிவின் காரணமாக இக்காட்டில் உள்ள ஊசியிலை மரங்கள் அனைத்தும் மிகுந்த கதிர்வீச்சுக்கு உட்பட்டு இறந்ததன் விளைவாக இவை செந்நிறமாக மாறின. இதனாலேயே இது சிவப்புக் காடு என அழைக்கப்படுகிறது. உலகின் மிகுந்த மாசுபட்ட பகுதிகளில் இது ஒன்றாகும்.