அல்முடெனா பெருங்கோவில் (எசுப்பானியா:Catedral de la Almudena) என்பது எசுப்பானியாவின் மத்ரித் நகரில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கத் ஆலயம் ஆகும். இது மலை உச்சி ஒன்றில் அமைந்துள்ளது. இதையடுத்து மாட்ரிட்டின் அரண்மனை அமைந்துள்ளது.
இது 1879 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது. எனினும் இதன் வடிவமைப்புத்திட்டம் மாற்றப்பட்டு 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயம் போல் தோன்றுமளவுக்கு இதனை வடிவமைத்தனர். இதன் கட்டுமானப்பணிகள் 1882 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது, எனினும் எசுப்பானிய உள்நாட்டுப் போரினால் இதன் கட்டுமானப்பணிகள் தடைப்பட்டன. 1880ஆம் ஆண்டுகளிலும் இது கட்டி முடிக்கப்படவில்லை. பின்னர் 1993 ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இப்பெருங்கோயிலினை நேர்ந்தளித்தார்.