பினாங்கு பாலம் (மலாய்: Jambatan Pulau Pinang) மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் ஒரு நீண்ட பாலம் ஆகும். இது நிலப்பகுதியில் இருக்கும் பிறை மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 14, 1985 அன்று போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும்.
கண்ணோட்டம்
1985 க்கு முன்னர், பட்டர்வொர்த் மற்றும் ஜோர்ஜ் டவுன் மாநகர்
இடையே நீர்வழிப் போக்குவரத்து அரசுக்கு சொந்தமான பினாங்கு படகு சேவையை
மற்றும் சார்ந்து இருந்தது. பின் அதனை ஈடுகட்ட பினாங்கு பாலம் அமைக்க
மலேசிய மத்திய அரசு பரிந்துரை செய்தது.
வரலாறு
- 1970 களின் ஆரம்பத்தில் : நிலப்பகுதியில் இருக்கும் பிறை
மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கும் பாலம்
அமைக்க யோசனை.
- 1970 களின் பிற்பகுதியில் : மலேசிய 3ஆம் பிரதம மந்திரி துன்
உசேன் ஓன் காலத்தில் பினாங்கு பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
- 1981 ஜூலை 23 : பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ச.
சாமிவேலு பினாங்கு பாலம், கேபிள் பாதை பாலமாகக் கட்டப்படும் என்று
அறிவித்தார்.
- 1982 : பினாங்கு பாலம் கட்டுமான பணி அதிகாரப்பூர்வமாக
தொடங்கியது.
- 3 ஆகஸ்ட் 1985 : மலேசிய 4வது பிரதம மந்திரி துன் டாக்டர்
மகாதீர் பின் முகமது பினாங்கு பாலத்தை உத்தியோகபூர்வமாக திறந்து
வைத்தார்.
- 14 செப்டம்பர் 1985 : பினாங்கு பாலம் அதிகாரப்பூர்வமாக
போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.
விவரக் குறிப்பீடு
- ஒட்டுமொத்த நீளம் : 13.5 கி.மீ
- நீளம் தண்ணீர் மீது : 8.4 கி.மீ.
- முதன்மை இடைவெளி : 225 மீ
- தண்ணீர் மேலே உயரம் : 33 மீ
- வாகனப் பாதைகள் எண்ணிக்கை : 3 ( ஒவ்வொரு திசையில் )
- ஒட்டுமொத்த செலவு : மலேசிய ரிங்கிட் 4.5 பில்லியன்
- பாலத்தில் உச்ச வேக வரம்பு : 80 கி.மீ. /
மணிநேரம்
மேலும் பார்க்க