கஜாக்கி அணை, ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்டு மாகாணத்தில் உள்ள நீர் மின் ஆற்றல் அணையாகும். இது ஹெல்மண்டு ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கந்தகாரில் இருந்து 100 மைல் (161 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது. இது நீர்ப்பாசனத்திற்கும், மின்னாற்றலுக்கும் பயன்படுகிறது. இதன் மூலம் 650,000 ஏக்கர் பரப்பளவிலான நிலத்துக்கு நீர் கிடைக்கிறது. இது 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அணை 270 மீட்டர் நீளமுடையது. இது சிஸ்தன் பகுதிக்கு செல்லும் நீரை கட்டுப்படுத்துகிறது.
இந்த அணைக்கான கட்டிடப் பணிகள் 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1953ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.
1975, 16.5 மெகாவாட் திறன் கொண்ட இரு நிலையங்கள் அணையோரத்தில் நிறுவப்பட்டன.
2001ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானை தாக்கிய ஐக்கிய அமெரிக்க வான்படை இந்த அணையையில் உள்ள மின் சேகரிப்பு நிலையத்தையும் குறிவைத்தது.
உலக வங்கியிடமும் பிறரிடமும் இருந்து பெற்ற பணத்தில் இரண்டு மின் நிலையங்களும் மறுசீரமைக்கப்பட்டன. தற்போது 33 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளன. செப்டம்பர் 2005 முதல் முதல் நிலையமும், அக்டோபர் 2009 முதல் அடுத்த மின்நிலையமும் இயங்கத் தொடங்கின.
இங்கு 2007 பிப்பிரவரி மாதத்தில் நேட்டோவுக்கும், தாலிபானுக்கும் இடையில் சண்டை நடைபெற்றது. தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்தோர் இந்த அணையை சீர்குலைக்க முயன்றனர்
2008 ஆகஸ்டு மாத இறுதியில், கந்தகாரில் இருந்து மூன்றாவது டர்பைன் கொண்டுவரப்பட்டது. இதற்கு பிரித்தானிய அரசு முன்னின்று உதவியது ஏழு ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலும், இன்னும் அது நிறுவப்படவில்லை. இதற்கு 700 டன் சிமெண்ட் தேவைப்படும்.
இதைப் பற்றி பிபிபி ஓர் அறிக்கையை வெளியிட்டது. புதிய டர்பைனும் இயங்கத் தொடங்கினால் மொத்தமாக 51 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
1972ஆம் ஆண்டில் ஈரானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, 910 cubic feet per second (26 m3/s) அளவு நீரையாவது தருவதாக ஆப்கானிஸ்தான் ஒப்புக்கொண்டது. 1998ஆம் ஆண்டில், நீரை ஈரானுக்கு அனுப்பாமல் தாலிபான்கள் தடைசெய்து, நீரை வேறுபக்கமாக திருபிவிட்டனர். இதனல் ஹெல்மண்டு பள்ளத்தாக்கு வற்றியது. பல உயிரினங்கள் நீராதாரம் இன்றி மடிந்தன,
விக்கிமீடியா பொதுவகத்தில் கஜாக்கி அணை தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |