கிபி 11 ஆம் நூற்றாண்டுக்கும் 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்ட இந்த மினார், பல நூற்றாண்டுகளாக வெளியுலகுக்குத் தெரியாமல் மறைந்திருந்தது. 1886 ஆம் ஆண்டில், சர். தாமசு ஓல்டிக் (Thomas Holdich) என்பார் இதனைக் கண்டுபிடித்துத் தெரியப்படுத்தினார். எனினும், 1957 ஆம் ஆண்டில் ஆந்திரே மாரிக் (André Maricq) என்னும் பிரான்சு நாட்டுத் தொல்லியலாளரரின் ஆய்வுகள் மூலமாகவே இது வெளியுலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
2002 ஆம் ஆண்டில் இது ஒரு உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
- உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்