ஒலிம்பியா ( கிரேக்கம்: Ολυμπία Olympía), கிரீசிலுள்ள பண்டைய புகலிடம் ஆகும். இவ்விடம் பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தியதற்காக அறியப்படுகிறது. இங்கு, கி.மு. 776 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டு வந்தன. கிரேக்கக் கடவுள் சூசு நினைவாக முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடந்தன. கி.பி. 394 இல், இந்த விளையாட்டுக்களை அஞ்ஞானிகளின் வழிபாடு எனக் கருதி அப்போதைய மன்னர் தியோடோசியசு முடிவுக்கு கொண்டு வந்ததாக நம்பப் படுகிறது.
விக்கிமீடியா பொதுவகத்தில் ஒலிம்பியா தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |