மல்போர்க் கோட்டைமனை (Malbork Castle; மல்போர்கில் டெயுடோனிக் (செருமானிய) ஆணையின் கோட்டைமனை; Castle of the Teutonic Order in Malbork) என்பது உலகிலுள்ள தரைமேற்பரப்பில் உள்ள கோட்டைமனைகளில் பெரியது ஆகும். இது சிலுவைப் போர் வீரர்களின் செருமானிய கத்தோலிக்க சமய ஆணையின்படி டெயுடோனிக் (செருமானிய) வீரர்களால் கட்டப்பட்டது. இவ்வாணை மரியாளின் கோட்டைமனை என்ற பெயரைக் கொண்டிருந்தது. இதைச் சூழவுள்ள நகர் மரியாளின் கோட்டைமனை என்ற அர்த்தத்தையுடைய "மரின்பேர்க்" என அழைக்கப்பட்டது.
விக்கிமீடியா பொதுவகத்தில் Castle in Malbork தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |