மேன்மை தாங்கிய அரசியின் அரண்மனை மற்றும் கோட்டை அல்லது பொதுவாக இலண்டனின் கோபுரம் என அறியப்படும் இது மத்திய இலண்டன், இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையாகும். இதனை வடிவமைத்தவர், நோர்மன் துறவியும், தேவாலயம் மற்றும் கோட்டைகள் கட்டுவதில் புகழ்பெற்ற குண்டல்ப் ஆவார். இது இலண்டன் நகரத்தில் உள்ள கோபுர ஹம்லெட் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இலண்டன் மாநகரத்தின் கிழக்கு முனையில் இருந்து கோபுர மலை எனப்படும் திறந்தவெளியால் பிரிக்கப்பட்டுள்ளது. இது 1066 ன் இறுதியில் நார்மனின் இங்கிலாந்து வெற்றியின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்டது.
விக்கி ஊடக நடுவத்தில்:
()
|