மாலகா பெருங்கோவில் (Cathedral of Málaga) என்பது மறுமலர்ச்சிக் கால தேவாலயங்களில் ஒன்றாகும். இது எசுப்பானியாவின் தெற்குப்பகுதியில் அமைந்திருக்கும் மாலகா நகரில் உள்ளது. இதன் அமைவிடம் தொலைந்துபோன மத்தியகால சொனகர்களின் தூண்களின் அமைவிடமாக குறித்துக் காட்டப்படும் இடமாகும். இது 1528 மற்றும் 1782 இற்கு இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்டது. இதன் அமைப்பு டீகோ தெ சிலோவால் அமைக்கப்பட்டது. இதன் உட்பகுதியும் கூட மறுமலர்ச்சிக்கால அமைப்பிலேயே உள்ளது.
மாலகா பெருங்கோவில் முக்கோண வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வடக்குப் பக்கக் கோபுரம் 86மீட்டர் உயரம் கொண்டது. இதன் உயரம் காரணமாக அடலூசியாவின் இரண்டாவது உயரமான பெருங்கோவிலாகவும் விளங்குகிறது. இதன் தெற்குக் கோபுரம் இன்னமும் கட்டி முடிக்கப்படவில்லை.
விக்கிமீடியா பொதுவகத்தில் மாலாகா பெருங்கோவில் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |