மாமல்லபுர மரபுக்கோயில்கள் அனைத்தும் பல்லவர்களால் உருவாக்கப்பட்ட கோயில்களாகும். இவை கோரமண்டல் கரையில் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இவை 1984ல் யுனெஸ்கோ அமைப்பின் உலக மரபுச்சின்ன பட்டியலில் இடம்பெற்றது. இந்த 2000 வருட பழமையான கோயில் நகரத்தில் 40க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் இருந்ததாக அறியப்படுகிறது. இவை மாமல்லன் என்றழைக்கப்படும் முதலாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களாகும்.
யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ள மாமல்லபுரக் கோயில்கள் நான்கு வகைப்பட்டவை.