அன்னபூர்ணா 1, இமயமலைத் தொடரின் நேபாளம் நாட்டில் அன்னபூர்ணா என்னும் துணைத் தொடரில் உள்ள ஒரு மலை ஆகும். 8,091 மீட்டர்கள் (26,545 அடிகள்) உயரம் கொண்ட இது உலகின் பத்தாவது உயரமான மலை. 1950 ஆம் ஆண்டு யூன் 3 ஆம் தேதி பிரான்சு நாட்டைச் சேர்ந்த மலையேறும் குழுவைச் சேர்ந்த மொரிசு ஏர்சொக்கும் லூயிசு லாச்செனலும் முதன் முதலாக இதன் உச்சியை அடைந்தனர்.