டொலேடோ பெருங்கோவில் (ஆங்கிலம்: Primate Cathedral of Saint Mary of Toledo, Spanish: Catedral Primada Santa María de Toledo) என்பது எசுப்பானியாவின் டொலேடோ எனும் நகரில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இதுவே டொலேடோ திருச்சபையின் ஆசனப் பெருங்கோவில் ஆகும். இதன் கட்டுமானப்பணிகள் 1227 ஆம் ஆண்டு மூன்றாம் பெடினாண்ட் எனும் மன்னனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இது கோதிக் கட்டிடக்கலைக்குப் பிரசித்தமான பேராலயமாகும். எனினும் சில இடங்களில் முடேயர் கட்டிடக்கலையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.