பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa), பாரசீக மொழி: تخت جمشيد Takht-e Jamshid அல்லது پارسه பார்சே [Pārseh], "பாரசீகர்களின் நகர்" எனப் பொருள்படும்) என்பது அகாமனிசியப் பேரரசின் சடங்குக்குரிய தலைநராக (சுமார் கி.மு. 550–330) இருந்தது. பெர்சப்பொலிஸ் ஈரானிய பார்ஸ் மாகாணத்தில் உள்ள சிராஸ் நகரிலிருந்து 60 km தூரம் வடகிழக்கில் அமைந்துள்ளது. ஆரம்ப பெர்சப்பொலிஸ் இடிபாடுகள் கி.மு. 515 ஆம் ஆண்டு காலத்துக்குரியன. இது அகாமனிசியப் பாணி கட்டடக்கலையின் முன்மாதிரியாக உள்ளது. 1979 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பெர்சப்பொலிஸ் இடிபாடுகளை உலகப் பாரம்பரியக் களம் என அறிவித்தது.
பண்டைய பாரசீகர்கள் இதனைப் "பார்சா" (Pārsa;