எருசலேம் நரம்புப் பாலம் (Jerusalem Chords Bridge) அல்லது எருசலேம் நார்ப் பாலம் (Jerusalem Bridge of Strings எபிரேயம்: גשר המיתרים, Gesher HaMeitarim) என்பது எருசலேம் நகர நுழைவில் அமைந்துள்ள ஓர் பாலமாகும். இது ஆகஸ்ட் 19, 2011 முதல் இலகு தொடரூந்துதிற்காக பயன்படுத்தப்படுகின்றது. இப் பாலம் கட்ட கிட்டத்தட்ட $70 மில்லியன் செலவானது. இது சூன் 25, 2008. அன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை வடிவமைத்தவர் எசுப்பானியக் கட்டடக் கலைஞர் மற்றும் பொறியாளர் ஆகிய சந்தியாகோ கலத்ராவா ஆவார்.