இஷ்தர் கோயில் நுழைவாயில் (Ishtar Gate ) (அரபு மொழி: بوابة عشتار) தற்கால ஈராக் நாட்டின் பண்டைய பாபிலோன் நகரக் கோட்டையின் எட்டு நுழைவாயில்களில் ஒன்றில் அமைந்த இஷ்தர் தெய்வத்திற்கான கோயிலின் நுழைவு வாயில் ஆகும்.
இஷ்தர் கோயில் நுழைவாயிலை, கிமு 575ல் புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர் (ஆட்சிக் காலம்:கிமு 604 - 562) கிமு 575ல் 120 சிங்கம், காளை மற்றும் யாழிகளின் சிற்பங்களுடன் கட்டினார்.
இஷ்தர் கோயிலின் கோட்டைச்சுவர் மற்றும் நுழைவு வாயில் கிபி 1930ல் நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது. இஷ்தர் கோயில் நுழைவுவாயிலை சீரமைத்து பெர்லின் நகரத்தின் பெர்கமோன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர் கிமு 575ல் பாபிலோனியர்களின் இஷ்தர் எனும் தாய்க் கடவுளுக்கு மெருக்கூட்டிய செங்கற்களால் கோயில் சுவர்களை எழுப்பினார். இச்சுவர்களில் பாபிலொனியக் கடவுளர்களை நினைவுப்படுத்தும் விதமாக 120 சிங்கங்கள், காளைகள் மற்றும் யாழிகளின் சிற்பங்களை நிறுவினார்.
பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக பாபிலோனின் இஷ்தர் கோயில் நுழைவாயில் போற்றப்படுகிறது.
விக்கிமீடியா பொதுவகத்தில் இஷ்தர் கோயில் நுழைவாயில் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |