திரு இருதயத் தேசிய பசிலிக்கா (ஆங்கிலம்:National Basilica of the Sacred Heart) என்பது பிரசல்ஸில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்க சிறிய பசிலிக்காவும் பங்குத் தேவாலயமும் ஆகும். இத்தேவாலயம் இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெல்ஜிய விடுதலையின் 75 வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுமகமாக 1905 இல் அடையாளபூர்வமாக அரசர் லியோபோல்டினால் முதலாவது கல் வைக்கப்பட்டது. உலக மகா யுத்தங்கள் இரண்டினாலும் கட்டுமானப் பணி தாமதமாகி இறுதியாக 1969 இல் நிறைவு பெற்றது. மெச்சலன் பிரசல்ஸ் தலைமை பேராயருக்கு உரியதான இத்தேவாலயம் பரப்பளவு அடிப்படையில் உலகிலுள்ள பத்து பெரிய உரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாகும்.
விக்கிமீடியா பொதுவகத்தில் Basilica of the Sacred Heart, Brussels தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |