கடிஸ் பெருங்கோவில்(ஆங்கிலம் Cádiz Cathedral; எசுப்பானியம்: Catedral de Cádiz, Catedral de Santa Cruz de Cádiz) என்பது தெற்கு எசுப்பானியாவின் கடிஸ் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். 1722 ஆம் ஆண்டிலிருந்து 1838 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இது கட்டப்பட்டது. 1931 ஆம் ஆண்டில் இது எசுப்பானியக் கலாச்சாரக் களமாக பிரகடனம் செய்து வைக்கப்பட்டது. இதன் முன்னைய பெருங்கோவில் 1260 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு 1596 ஆம் ஆண்டில் எரிந்து சாம்பலாயின.