அகழியின் மீது அமைந்துள்ள மிகவும் தூய இறையன்னையின் பாதுகவலின் முதன்மைப்பேராலயம் (ஆங்கிலம்:Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat, உருசியம்: Собор Покрова пресвятой Богородицы, что на Рву) அல்லது போக்ரோவ்ஸ்கி முதன்மைப்பேராலயம் (உருசியம்: Покровский собор) என்பது மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள உருசிய மரபுவழித் திருஞ்சபையின் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ பெயராகும். இவ்வாலயம் பொதுவழக்கில் "பேறுபெற்ற பசிலியின் முதன்மைப்பேராலயம்" (Cathedral of Vasily the Blessed) (உருசியம்: Собор Василия Блаженного) எனவும், ஆங்கிலத்தில் "புனித பசில் பேராலயம்" (ஆங்கிலம்:Saint Basil's Cathedral) எனவும் அழைக்கப்படுகின்றது. இது 1555–61 காலப்பகுதியில் "அச்சத்திற்குரிய" இவானின் கட்டளையால் அஸ்டிரகான் மற்றும் காசான் முற்றுகையின் நினைவாக கட்டப்பட்டது.