சவேடகன் அடுக்குத் தூபி அதிகாரப்பூர்வமாக சவேடகன் சிதி டாவ் என்றும் சிறந்த டகன் தூபி அல்லது தங்கத் தூபி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் தூபி மியான்மர், ரங்கூனில் அமைந்துள்ள ஒரு தங்கமுலாம் பூசப்பட்ட தூபியாகும். இதன் மொத்த உயரம் 99 மீட்டர் உயரம் (325 அடி). பகோடா சிங்குட்தரா மலையில் அமைந்துள்ளது, கந்தாங்கி ஏரிக்கு மேற்காகவும், யாங்கன் நகர வானில் மிக உயர்ந்த கட்டிடமாக ஆதிக்கம் செலுத்துகிறது.
6 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மோன் மக்களால் பகோடா கட்டப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனினும், புராணத்தின் படி, சவேடகன் தூபி (பகோடா) சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது, இது உலகின் மிகப் பழமையான பெளத்த தலமாக உள்ளது. பாரம்பரியம் படி , சிங்குட்தரா மலையின் வடக்குப் பகுதியிலிருந்து தப்புசா மற்றும் பாலகிகா - என்ற இரண்டு வியாபாரம் செய்யும் சகோதரர்கள் தற்போது யாங்கன் எனும் அழைக்கப்படும் பகுதியில் தங்களது வாழ்நாள் பயனாக கௌதம புத்தரை சந்தித்தனர் மற்றும் புத்தரிடமிருந்து அவரது எட்டு முடிகளை பெற்றனர். சகோதரர்கள் பர்மாவுக்குத் திரும்பினர், அங்கு ஆட்சிபுறிந்த அரசர் ஓகலப்பாவின் உதவியுடன்,சிங்குட்தரா மலையில் கௌதம புத்தரின் சிலைகள் மற்றும் புத்த மதங்களின் புனித நூல்கள் ஆக அணைத்தும் புனிதப்படுத்தப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது. அப்போது அரசர், முடிகள் இருந்த பெட்டியை திறந்தபோது, பல நம்பமுடியாத விஷயங்கள் பின்வருமாறு நடந்ததாக செவி வழிச்செய்தி உள்ளது:
“ | ஆண்கள் மற்றும் ஆன்மாக்களிடையே ஒரு கலவை இருந்தது ... முடிகளில்லிருந்து வெளிப்படும் கதிர்கள் மேலே வானங்கள் மற்றும் கீழே நரகத்தில் வரை ஊடுருவி ... பார்வை இழந்தவர்களால் பொருட்களை பார்க்க முடிந்தது ... காது கேளாதவர்களால் ஒலிகள் கேட்க முடிந்தது ... வாய் பேச இயலாதவர்களால் தெளிவாகவும் வெளிப்படையாகவும் பேச முடிந்தது ... பூமி அதிர்ந்தது ... கடல் காற்று பறந்து ... மேரு மலை அதிர்ந்தது ... மின்னல் ஒளிர்ந்தது... முழங்கால் உயரத்திற்கு மாணிக்ககற்கள் மழை பொழிந்தது... இது பருவகாலம்மில்லாது இருந்தாலும் இமயமலையில் உள்ள அனைத்து மரங்களும், மலர்கள் பூத்தது மற்றும் பழங்கள் காய்த்து தொங்கியது. | ” |
இந்த தூபி 14 ஆம் நூற்றாண்டு வரை பராமரிக்கப்படாமல் சேதமடைந்தமிருந்தது. அரசர் பின்னியா யு (1323-1384) அவர்களால் தூபி மறுசீரமைக்கப்பட்டு 18 மீ (59 அடி) உயரத்திற்கு மீண்டும் கட்டப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், ராணி பின்னியா தவு (1453-1472) தூபியின் உயரத்தை 40 மீ (131 அடி) உயர்த்தினார். மேலும் அவர் மலையின் மீது மேடை போல தளம் அமைத்தார், அதன் மீது கொடிகளை அமைத்தார், அதன் பராமரிப்புக்காக நிலம் மற்றும் பரம்பரை அடிமைகளை நியமித்தார். 1472 ஆம் ஆண்டில் அவரது மருமகன் தாம்மசேதிக்கு பின்னா தாவ் தனது அரியணை அளித்தார். தனது மீதமுள்ள நாட்களை கழிப்பதற்கு அவர் டகானுக்கு திரும்பினார். வாழும் கடைசி நாட்களில் படுக்கை இருக்கும் போது, அவரது தலை தூபியை பார்த்துக்கொண்டிருப்பதற்கு ஏதுவாக தூபி இருக்கும் திசை நோக்கி வைக்கப்பட்டது. சவேடகனில் உள்ள கல்வெட்டுகளில் மோன் இனத்தை சேர்ந்தவர்களால் 1436 ஆம் ஆண்டு முதல் தாம்மசேதி காலம் வரையில் செய்யப்பட்ட பல சீரமைப்புப் பணிகள் குறிக்கப்பட்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பர்மாவின் மிகவும் பிரபலமான பௌத்த புனித யாத்ரீக ஸ்தலமாக சவேடகன் பகோடா மாறியது.
பின்வரும் நூற்றாண்டுகளில் தொடர்ச்சியான பூகம்பங்கள் தூபிக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தின. 1768 பூகம்பத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய சேதமானது தூபியின் உச்சியைக் கீழே கொண்டுவந்தது, ஆனால் அரசர் ஹிசினுஷுன் தற்போதைய அதன் உயரமான 99 மீ (325 அடி) உயரத்திற்கு உயர்த்தினார். 1871 ஆம் ஆண்டில், பிரிட்டனால் கீழ் பர்மாவைக் கைப்பற்றிய பின்னர், ஒரு புதிய குடை கிரீடம் மன்னர் மின்டான் மின்ரால் வழங்கப்பட்டது. 1970 அக்டோபரில் மிதமான பூகம்பம் குடையின் கிரீடத்தை அதன் அடிப்பகுதி அமைப்பில் இருந்து விளகியது வெளிப்படையாக தெரிந்தது.